Tuesday, December 18, 2012

மொபைல் திரையை வளைத்து மடிக்கலாம்

                                             
பொதுவாக மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்கிறோம். சில மாடல்கள், திரைப் பகுதியைக் கீழ் பகுதியின் மீது மடித்து வைக்கின்ற வகையிலும், சில ஸ்லைடிங் முறையில் சுருக்கி வைக்கின்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். எந்த நிலையிலும், ஸ்கிரீன் மடக்கப்படாமல் தான் இருக்கும், இருக்க முடியும்.
இதிலும் ஒரு புதுமையை சாம்சங் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. மொபைல் போன் திரையை வளைத்து மடித்து எடுத்துச் செல்லும் வகையில் திரைப் பகுதியை அமைக்க இருக்கிறது. திரைப் பகுதியை வளைத்து அமைப்பதில் பல ஆண்டுகளாக, எல்.ஜி., பிலிப்ஸ், ஷார்ப், சோனி மற்றும் நோக்கியா ஆகியன கடும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இதில் ஜெயிக்கப் போவது சாம்சங் தான் எனத் தெரிகிறது. வரும் காலக்ஸி எஸ் 4 மற்றும் காலக்ஸி நோட் 3 சாதனங்களில், இந்த வளைக்கக் கூடிய திரை வரலாம். இவற்றின் திரையை வளைக்கலாம், மடிக்கலாம், சுருட்டியும் வைக்கலாம். வரும் 2013ல் இந்த வகைத் திரையுடன் மொபைல் போன் வரும் பட்சத்தில், மொபைல் போனைக் கீழே போட்டால் என்னவாகும் என்ற பயமின்றி பயன்படுத்தலாம்.