Wednesday, December 19, 2012

குறைந்த விலை பாப்லெட்


சாம்சங் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி கிராண்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கேலக்ஸி கிராண்ட் குறைந்த விலைகொண்ட ஆன்ட்ராய்டு பாப்லெட்டாக இருக்கும். இதிலும் கேலக்ஸி Sயைப் போன்றே அகலமான 5 அங்குலத்திரை உள்ளது. அதாவது 800 x 480 ரெசுலூசன் கொண்ட திரை. இதில் 1.2 GHz திறனுள்ள ப்ராசசெர் உள்ளது. சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் உள்ள பல சிறப்பம்சம்கள் இதிலும் உள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவுள்ள ப்ரன்ட் கேமரா கொண்டது. இந்த புதிய சாதனம் ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகிறது. மேலும் இதிலுள்ள சிறப்பம்சம்களாவன, ஒரேநேரத்தில் இருவேறு அப்ளிகேசன்களை உபயோகிக்க முடியும்.
S-வாய்ஸ் என்ற அமைப்பு. வீடியோ பாப்பப் மூலமாக வீடியோவை சிறிய அளவில் வேறொரு திரையில் பார்க்கலாம். இதன் விலை மற்றும் வெளிவரும் நாட்கள் மட்டும் சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.